Sunday, 25 August 2024

பெண் குழந்தை வைத்திருப்போர் கவனத்திற்கு... ரூ.70 லட்சம் ரிட்டன் கிடைக்கும் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi Yojana - SSY) அல்லது செல்வமகள் சேமிப்புத் திட்டம் 

சுகன்யா சம்ரிதி யோஜனா சேமிப்பு திட்டத்தில் ஒருவர் குறைந்தபட்சமாக 250 ரூபாயையும், அதிகபட்சமாக 1.50 லட்சம் ரூபாயையும் ஒரு நிதியாண்டில் முதலீடு செய்யலாம்.

         சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi Yojana - SSY) அல்லது செல்வமகள் சேமிப்புத் திட்டம் என்பது அரசு வழங்கும் ஒரு பிரபலமான சிறுசேமிப்புத் திட்டமாகும். இந்த திட்டமானது பிரத்யேகமாக பெண் பிள்ளைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

          10 வயதுக்கு உட்பட்ட பெண் பிள்ளைகளுக்கு பதிலாக பாதுகாவலர்கள் SSY அக்கவுன்ட்டை திறக்கலாம். மேலும் இந்த திட்டத்தில் ஜாயின்ட் அக்கவுன்ட் திறப்பதற்கான அனுமதி இல்லை என்பதை ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும். “இத்திட்டத்தின் கீழ், ஒரு வீட்டில் அதிகபட்சமாக இரண்டு பெண் பிள்ளைகளுக்கு மட்டுமே இந்த அக்கவுன்ட்டை திறக்கலாம்” என்று SBI வெப்சைட் குறிப்பிடுகிறது.

        சுகன்யா சம்ரிதி யோஜனா: தற்போதைய வட்டி விகிதம் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்திற்கான வட்டி விகிதத்தில் கடந்த காலாண்டு முதலில் இருந்து எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை. ஜூலை-செப்டம்பர் 2024 காலாண்டின் படி, இத்திட்டத்திற்கான வட்டி விகிதம் 8.2 சதவீதமாக உள்ளது.

        சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY): குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச முதலீடு இந்தத் திட்டத்தில் ஒருவர் குறைந்தபட்சமாக 250 ரூபாயையும், அதிகபட்சமாக 1.50 லட்சம் ரூபாயையும் ஒரு நிதியாண்டில் முதலீடு செய்யலாம்.

         சுகன்யா சம்ரிதி யோஜனா: மெச்சூரிட்டி பொதுவாக இத்திட்டம் 15 வருடங்களில் மெச்சூரிட்டியாகும். மேலும் ஒருவேளை அந்த பெண் பிள்ளை 18 வயதில் திருமணம் செய்து கொண்டாலோ அல்லது 21 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதை அடைந்தாலோ அப்பொழுதும் பாலிசி மெச்சூர்டு ஆனதாக கருதப்படும்.

        சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY): வரிச்சலுகைகள் ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் நீங்கள் செய்யும் 1.50 லட்சம் வரையிலான தொகைக்கு வருமான வரி சட்டத்தில் உள்ள பிரிவு 80C-இன் கீழ் டாக்ஸ் டிடக்க்ஷன் கிளைம் செய்து கொள்ளலாம்.

         ஒரு நிதியாண்டில் ஒருவர் 1.50 லட்சம் ரூபாயை சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் முதலீடு செய்தால் மெச்சூரிட்டியின் போது அவருக்கு எவ்வளவு பணம் ரிட்டனாக கிடைக்கும்?: ஒவ்வொரு மாதமும் நீங்கள் 5,000 ரூபாயை SSY திட்டத்தில் முதலீடு செய்துவந்தால், ஒரு வருடத்தில் நீங்கள் மொத்தமாக 60,000 ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள். இந்த திட்டமானது ஒரு வருடத்திற்கு 8.2% என்ற கூட்டு வட்டி முறையை வழங்குவதால் 15 வருடத்தில் உங்களுடைய முதலீடு 9 லட்சம் ரூபாயாக இருக்கும். மேலும் இதற்கான வட்டி 18.92 லட்சம் ரூபாய் என்ற கணக்கில், உங்களுடைய மொத்த மெச்சூரிட்டி தொகை 27.92 ரூபாயாக கைக்கு கிடைக்கும்.

       அதேபோல நீங்கள் ஒவ்வொரு வருடமும் 1 லட்ச ரூபாய் அல்லது ஒவ்வொரு மாதமும் 8,333.33 ரூபாயை முதலீடு செய்தால், 15 வருடங்களுக்கு நீங்கள் 15 லட்சம் ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள். இதற்கான வட்டி 31.53 லட்சம் ஆகவும், மெச்சூரிட்டியின்போது உங்களுக்கு 46.53 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

         ‌ ஒரு நிதியாண்டில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யக்கூடிய அதிகபட்ச தொகையான 1.50 லட்சம் ரூபாயை நீங்கள் முதலீடு செய்யும் பட்சத்தில் (அல்லது ஒவ்வொரு மாதமும் 12333.33 ரூபாய்) உங்களுடைய முதலீடு 15 வருடங்களில் 22.50 லட்ச ரூபாயாக இருக்கும். இந்த முதலீட்டுத் தொகைக்கு 47.30 லட்ச ரூபாய் வட்டியாக பெறுவீர்கள். மேலும் மொத்த மெச்சூரிட்டி தொகை 69.80 லட்ச ரூபாயாக இருக்கும்.


1 comment:

  1. IMU CET Coaching in Chandigarh – Gurukul Career Group provides the best coaching for the Merchant Navy in Chandigarh.

    ReplyDelete